ஞாயிறு, 22 டிசம்பர், 2013

::: போராட வந்தவன்...!!! :::

எனக்குள்
பேச்சாகி
மூச்சாகி
காதலுமிழும்
கதிர்வீச்சாகி
உயிரெங்கும் நிறைந்து
உடலெங்கும் உறைந்து
செல்களுக்குள் நுழைந்து
தசைகளில் வளைந்து
எனக்குள் எல்லாமுமாக
இருந்து
எல்லாவற்றையும் எனக்காக‌
கொடுத்து
என்னைச்
சிறைடுத்தியவளே...!

உனக்கு தெரியுமா...?

நான்
உன் விடுதலைக்கும் சேர்த்து
போராட வந்தவன்...!