'யாரை நம்புவது?' என்ற கேள்வி எல்லா வயதுடையோராலும் வரம்பின்றி கேட்கப்படுகிறது. 'யாரையும் நம்ப முடியவில்லை!' என்ற பதில் அனைவராலும் சொல்லப்படுகிறது. 'இது நம்மையும் சேர்த்துத்தான் சொல்லப்படுகிறது' என, ஏன் எவருக்குமே குற்றவுணர்ச்சி ஏற்படுவதில்லை.
ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளாத - தோல்வியை ஏற்றுக்கொள்ளாத - சிறு அவமானத்தைச் சகித்துக்கொள்ளாத மனங்களை உருவாக்கி வருகிறோம். இது சரிதானே?! ஏன் ஏமாற வேண்டும்? ஏன் தோற்க வேண்டும்? எதற்காக அவமானப்பட வேண்டும்? என்ற கேள்விகள் இயல்பாக எழக்கூடும்.
யாரையும் ஏமாற்றாமலோ, யாரையும் தோற்கடிக்காமலோ, யாருக்கும் அவமானம் தராமலோ இருக்கிறோமா? இருந்தால் இதையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை தான். ஆனால் அப்படியில்லையே! நம் சூழ்நிலைக்காக யாரையும் ஏமாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நம் பெயர்ப்போதைக்காக உடனுற்ற நண்பர்களைக்கூட தோற்கடிக்கத் துடிக்கிறோம். நம் தேவைக்காக யாரையும் அவமானப்படுத்தும் அடிமனக்குரூரத்தோடு அலைகிறோம்.
ஏமாற்றினாலென்ன? எல்லோரையும் நம்புவதால் என்ன இழந்துவிடப் போகிறோம்.! யாரை நம்பலாம் எனத் தேடித்தேடி தெளிவோடு ஆளறியத் தெரிந்துகொள்வதைக் காட்டிலும் எல்லோரையும் நம்புவது உள்ளத்தைத் தெளிவாக வைத்திருக்கும்.
தோல்வியின் அனுபவத்தைக் கொண்டாட யாருமே தயாராயில்லை. போட்டியிடுவதே ஓர் இயக்கநிலைக்கு நம்மை இட்டு வைக்கும். அதைத்தான் நாம் ஆர்வத்தோடு செய்துகொள்ள வேண்டும். ஆனால், வெற்றிக்காக மட்டுமே போட்டியை அணுகுவதால் போட்டியிடும் பண்பிலிருந்து விலகி எல்லோரையும் தோற்கடிக்கவே துடிக்கிறோம்.
போட்டியிடுவதுதான் மிகச்சிறந்த பண்பு! வெற்றியைக் காட்டிலும் நம்மை நாம் துல்லியமாக சோதித்துக்கொள்ள போட்டி மட்டுமே உதவக்கூடியது. அதை யார் சொல்லித் தருகிறார்கள்? எல்லோரும் முதலிடத்திற்கு வர வேண்டுமெனில் யார்தான் இரண்டு, மூன்றென தொடர்வது? உடனிருப்போரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பெருமைப்படுவதற்காகவே நாம் வென்றாக வேண்டிய கட்டாயத்தைக் கற்றுக்கொள்கிறோம்! இது எத்துணை அபத்தமானது!
என்ன இழப்பைச் சந்தித்தாலென்ன? எத்தனைச் சோகங்கள் சூழ்ந்தாலென்ன? யாரையும் நம்பிவிடாதே என யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். சா விளிம்பின்வரை சூழ்ந்தோரைச் சார்ந்து வாழும் வாழ்விது! தனியாக இருந்து போட்டியிடவோ, தன்னை யாரென நிரூபிக்கவோ, தன் பெருமை சொல்லி பீற்றிக்கொள்ளவோ,தான் ஏமாற்றப்பட்டதைச் சொல்லிக் காட்டவோ தனியாக இருந்து செய்ய இயலாது. எதிரில் யாராவது அல்லது ஒரு கூட்டமோ தேவைப்படும். ஆகவே எல்லாவற்றிற்கும் அப்பால் ஒருவரை நம்புவதைப் போல மனதிற்கு இளகானது எதுவுமில்லை. ஏமாற்றத்தைத் தாண்டியும் ஏமாற்றியவரை மீண்டும் ஒரு வாய்ப்பளித்து நம்புவதைவிட அவரை வருத்தவும் திருத்தவும் தக்க தீர்வு எதுவுமில்லை. மேலும் எல்லோரையும் நம்பும் நபராக நாம் மாறும்போது எல்லோராலும் நம்பும் ஆளாக நாம் பிறக்கிறோம்.
நம்பிக்கை நல்லது! ஏமாற்றினாலும் நம்பிக்கை நல்லது! ஏமாற்றப்பட்டாலும் நம்பிக்கை நல்லது! தோற்றாலும் அவமானப்பட்டாலும் விழுந்தாலும் அதிலிருந்து மீள நம்பிக்கையே நல்லது! ஆதலால் அறுதியிட்டு சொல்கிறேன், அனைத்து இழப்பையும் சோகத்தையும் தீர்ப்பதற்கு ஒரு நம்பிக்கையே மருந்தாக முடியும்! 🖤
ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளாத - தோல்வியை ஏற்றுக்கொள்ளாத - சிறு அவமானத்தைச் சகித்துக்கொள்ளாத மனங்களை உருவாக்கி வருகிறோம். இது சரிதானே?! ஏன் ஏமாற வேண்டும்? ஏன் தோற்க வேண்டும்? எதற்காக அவமானப்பட வேண்டும்? என்ற கேள்விகள் இயல்பாக எழக்கூடும்.
யாரையும் ஏமாற்றாமலோ, யாரையும் தோற்கடிக்காமலோ, யாருக்கும் அவமானம் தராமலோ இருக்கிறோமா? இருந்தால் இதையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை தான். ஆனால் அப்படியில்லையே! நம் சூழ்நிலைக்காக யாரையும் ஏமாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். நம் பெயர்ப்போதைக்காக உடனுற்ற நண்பர்களைக்கூட தோற்கடிக்கத் துடிக்கிறோம். நம் தேவைக்காக யாரையும் அவமானப்படுத்தும் அடிமனக்குரூரத்தோடு அலைகிறோம்.
ஏமாற்றினாலென்ன? எல்லோரையும் நம்புவதால் என்ன இழந்துவிடப் போகிறோம்.! யாரை நம்பலாம் எனத் தேடித்தேடி தெளிவோடு ஆளறியத் தெரிந்துகொள்வதைக் காட்டிலும் எல்லோரையும் நம்புவது உள்ளத்தைத் தெளிவாக வைத்திருக்கும்.
தோல்வியின் அனுபவத்தைக் கொண்டாட யாருமே தயாராயில்லை. போட்டியிடுவதே ஓர் இயக்கநிலைக்கு நம்மை இட்டு வைக்கும். அதைத்தான் நாம் ஆர்வத்தோடு செய்துகொள்ள வேண்டும். ஆனால், வெற்றிக்காக மட்டுமே போட்டியை அணுகுவதால் போட்டியிடும் பண்பிலிருந்து விலகி எல்லோரையும் தோற்கடிக்கவே துடிக்கிறோம்.
போட்டியிடுவதுதான் மிகச்சிறந்த பண்பு! வெற்றியைக் காட்டிலும் நம்மை நாம் துல்லியமாக சோதித்துக்கொள்ள போட்டி மட்டுமே உதவக்கூடியது. அதை யார் சொல்லித் தருகிறார்கள்? எல்லோரும் முதலிடத்திற்கு வர வேண்டுமெனில் யார்தான் இரண்டு, மூன்றென தொடர்வது? உடனிருப்போரையெல்லாம் பின்னுக்குத் தள்ளி பெருமைப்படுவதற்காகவே நாம் வென்றாக வேண்டிய கட்டாயத்தைக் கற்றுக்கொள்கிறோம்! இது எத்துணை அபத்தமானது!
என்ன இழப்பைச் சந்தித்தாலென்ன? எத்தனைச் சோகங்கள் சூழ்ந்தாலென்ன? யாரையும் நம்பிவிடாதே என யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். சா விளிம்பின்வரை சூழ்ந்தோரைச் சார்ந்து வாழும் வாழ்விது! தனியாக இருந்து போட்டியிடவோ, தன்னை யாரென நிரூபிக்கவோ, தன் பெருமை சொல்லி பீற்றிக்கொள்ளவோ,தான் ஏமாற்றப்பட்டதைச் சொல்லிக் காட்டவோ தனியாக இருந்து செய்ய இயலாது. எதிரில் யாராவது அல்லது ஒரு கூட்டமோ தேவைப்படும். ஆகவே எல்லாவற்றிற்கும் அப்பால் ஒருவரை நம்புவதைப் போல மனதிற்கு இளகானது எதுவுமில்லை. ஏமாற்றத்தைத் தாண்டியும் ஏமாற்றியவரை மீண்டும் ஒரு வாய்ப்பளித்து நம்புவதைவிட அவரை வருத்தவும் திருத்தவும் தக்க தீர்வு எதுவுமில்லை. மேலும் எல்லோரையும் நம்பும் நபராக நாம் மாறும்போது எல்லோராலும் நம்பும் ஆளாக நாம் பிறக்கிறோம்.
நம்பிக்கை நல்லது! ஏமாற்றினாலும் நம்பிக்கை நல்லது! ஏமாற்றப்பட்டாலும் நம்பிக்கை நல்லது! தோற்றாலும் அவமானப்பட்டாலும் விழுந்தாலும் அதிலிருந்து மீள நம்பிக்கையே நல்லது! ஆதலால் அறுதியிட்டு சொல்கிறேன், அனைத்து இழப்பையும் சோகத்தையும் தீர்ப்பதற்கு ஒரு நம்பிக்கையே மருந்தாக முடியும்! 🖤