இராமாயணமும் லங்கையும் என்ற ஆங்கில நூலை 1940 ஆம் ஆண்டு டி. பரமேசுவர ஐயர் எனும் ஆய்வாளர் எழுதியுள்ளார். இந்தியாவில் இருக்கும் எல்லா இராமாயணக்கதைகளையும் ஆய்வு செய்து அவற்றினடிப்படையில் இராமன் ஒரு மதுப்பிரியராகவும் இறைச்சி விரும்புபவராகவும் காட்டுகிறார்.
வில்வித்தையை விரும்பி புரிந்த வில்லாளியான இராமன் மாமிசத் தேவைகளுக்காகவே வேட்டையில் வேட்கை மிக்கவனாக இருந்துள்ளான். அவன் மனம், தசைத் திரட்சிமிக்க உடற்கட்டோடு இருந்ததெல்லாம் இறைச்சிக்காக வேட்டையாடிய விளைவால் வந்தவையே என்கிறார். (பக்கம் 129)
"கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டியபோது திரும்பி அயோத்தியிருக்கும் திசைநோக்கி இராமன் தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்போது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டையாடப் போகிறேன்? இந்த வேட்டை இராஜரிஷிகள் சம்மதித்தல்லவா? ( அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27).
"விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான்- காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன். தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை மட்டுமே புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் " என்று கூறுகிறான். (அயோத்யா காண்டம் சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29) நூலின் பக்கம் -130.
குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது இராமனின் மனைவி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் மதுவும் இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம் சர்க்கம் 52, பாடல் 89)
காட்டிற்குள் நுழைந்த அன்று, இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் இரவுப்பட்டினி. விடிந்ததும் விடியாததுமாக இராமனும் இலட்சுமணனும் வில் அம்போடு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப்பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று, கொண்டுவந்து ஒரு மரத்தடியில் சமைத்து சாப்பிட்டனர். (சர்க்கம் 52 பாடல் 102) சுவையான இறைச்சியை சீதைக்குத் தந்து அவளை இராமன் திருப்திபடுத்தினான். (சர்க்கம் 96 பாடல் 1).
இத்தோடு முடியவில்லை இறைச்சிப்படலம்! மாறுவேடத்தில் வந்த இராவணனுக்குக்கூட சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள்! என் கணவர் விரைவில் வந்துவிடுவார். காட்டுப்பொருட்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி,காட்டுப்பன்றி கொண்டு வருவார். இஷ்னுமான் (முதலை முட்டை தின்னும் விலங்கு) கொண்டு வருவார். (ஆரண்ய காண்டம் சர்க்கம் 47, பாடல்கள் 22,23)
இப்படி இராமன் இறைச்சியுண்டதை ஏதோ ஓரிடத்தில் குறிப்பிடவில்லை வால்மீகி. பல்வேறு இடங்களில் இறைச்சியையே இராமன் தேடித்தேடி விரும்பி உண்டதாக வலியுறுத்திச் சொல்கிறார். வால்மீகியும் ஒரு வேடனென்பதால் வேட்டையாடிய இராமனையும் அவன் இறைச்சிப்பிரியனாக இருப்பதையும் சொல்லி சிலாகித்து எழுதுகிறார்.
இராமனின் பெயரால் நிகழும் தூய பிம்பங்களும் மாட்டிறைச்சி அரசியலும் இராமகாதைகளுக்கு முற்றிலும் முரணானவை. இராமனைத் தமிழுக்குக் கொண்டு வருகிற கம்பன் தன் மொழியாளுமையால் அப்போது தமிழகத்தில் நிலவிய புலாலுண்ணாமையை இராமாயணத்தில் எழுதுகிறார்.
இறைவனுக்குரிய எந்த இலக்கணத்திற்குள்ளும் இல்லாத இராமனைக் கம்பன் தன் கவித்திறத்தால் கடவுளாகக் கட்டமைக்கிறார். ஒழுக்கமற்றுத் திரிந்த வடக்கத்திய கதைபாத்திரத்தைத் தமிழாய்ந்து எழுதுகிறபோது ஒழுக்கத்தின் விழுமியங்களை ஒப்பேற்றி வைக்கிறார் இராமன் மீது.
கம்பராமாயணம் தமிழ் இலக்கியப்பெருங்கடலில் மிக முக்கியமானது. எண்பதாயிரம் எதுகை, மோனைத்தொடைகளோடும் கணக்கில்லாத கவியுறைந்த உவமைகளாலும் கம்பராமாயணத்தில் தமிழை இறைத்து நிரப்புகிறார். பத்து எதுகைக்கே படுத்துவிடுகிற பாவலர்களில் ஆயிரக்கணக்கான எதுகைகளோடு எக்காளமிடுகிறது கம்பன் கைவிரல் பிடித்த எழுத்தாணி!
ஆளாளுக்கு இராமாயணத்தை வளைத்தெழுதிய பின்பு கம்பனைக் கடைத்தேற்றிவிடக் கருதாத கவிஞர்கூட்டம் காலமைதி கொண்டுவிட்டது. மீண்டும் இராமாயணத்தை எழுதத் தொடங்கினால் அதில் வரலாற்று நாயகனாக கலைபத்தில் தலைசிறந்த இராவணன் கதைநாயகனாக விளைந்தெழுவான்.
வில்வித்தையை விரும்பி புரிந்த வில்லாளியான இராமன் மாமிசத் தேவைகளுக்காகவே வேட்டையில் வேட்கை மிக்கவனாக இருந்துள்ளான். அவன் மனம், தசைத் திரட்சிமிக்க உடற்கட்டோடு இருந்ததெல்லாம் இறைச்சிக்காக வேட்டையாடிய விளைவால் வந்தவையே என்கிறார். (பக்கம் 129)
"கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டியபோது திரும்பி அயோத்தியிருக்கும் திசைநோக்கி இராமன் தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்போது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டையாடப் போகிறேன்? இந்த வேட்டை இராஜரிஷிகள் சம்மதித்தல்லவா? ( அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27).
"விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான்- காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன். தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை மட்டுமே புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் " என்று கூறுகிறான். (அயோத்யா காண்டம் சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29) நூலின் பக்கம் -130.
குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது இராமனின் மனைவி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் மதுவும் இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம் சர்க்கம் 52, பாடல் 89)
காட்டிற்குள் நுழைந்த அன்று, இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் இரவுப்பட்டினி. விடிந்ததும் விடியாததுமாக இராமனும் இலட்சுமணனும் வில் அம்போடு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப்பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று, கொண்டுவந்து ஒரு மரத்தடியில் சமைத்து சாப்பிட்டனர். (சர்க்கம் 52 பாடல் 102) சுவையான இறைச்சியை சீதைக்குத் தந்து அவளை இராமன் திருப்திபடுத்தினான். (சர்க்கம் 96 பாடல் 1).
இத்தோடு முடியவில்லை இறைச்சிப்படலம்! மாறுவேடத்தில் வந்த இராவணனுக்குக்கூட சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள்! என் கணவர் விரைவில் வந்துவிடுவார். காட்டுப்பொருட்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி,காட்டுப்பன்றி கொண்டு வருவார். இஷ்னுமான் (முதலை முட்டை தின்னும் விலங்கு) கொண்டு வருவார். (ஆரண்ய காண்டம் சர்க்கம் 47, பாடல்கள் 22,23)
இப்படி இராமன் இறைச்சியுண்டதை ஏதோ ஓரிடத்தில் குறிப்பிடவில்லை வால்மீகி. பல்வேறு இடங்களில் இறைச்சியையே இராமன் தேடித்தேடி விரும்பி உண்டதாக வலியுறுத்திச் சொல்கிறார். வால்மீகியும் ஒரு வேடனென்பதால் வேட்டையாடிய இராமனையும் அவன் இறைச்சிப்பிரியனாக இருப்பதையும் சொல்லி சிலாகித்து எழுதுகிறார்.
இராமனின் பெயரால் நிகழும் தூய பிம்பங்களும் மாட்டிறைச்சி அரசியலும் இராமகாதைகளுக்கு முற்றிலும் முரணானவை. இராமனைத் தமிழுக்குக் கொண்டு வருகிற கம்பன் தன் மொழியாளுமையால் அப்போது தமிழகத்தில் நிலவிய புலாலுண்ணாமையை இராமாயணத்தில் எழுதுகிறார்.
இறைவனுக்குரிய எந்த இலக்கணத்திற்குள்ளும் இல்லாத இராமனைக் கம்பன் தன் கவித்திறத்தால் கடவுளாகக் கட்டமைக்கிறார். ஒழுக்கமற்றுத் திரிந்த வடக்கத்திய கதைபாத்திரத்தைத் தமிழாய்ந்து எழுதுகிறபோது ஒழுக்கத்தின் விழுமியங்களை ஒப்பேற்றி வைக்கிறார் இராமன் மீது.
கம்பராமாயணம் தமிழ் இலக்கியப்பெருங்கடலில் மிக முக்கியமானது. எண்பதாயிரம் எதுகை, மோனைத்தொடைகளோடும் கணக்கில்லாத கவியுறைந்த உவமைகளாலும் கம்பராமாயணத்தில் தமிழை இறைத்து நிரப்புகிறார். பத்து எதுகைக்கே படுத்துவிடுகிற பாவலர்களில் ஆயிரக்கணக்கான எதுகைகளோடு எக்காளமிடுகிறது கம்பன் கைவிரல் பிடித்த எழுத்தாணி!
ஆளாளுக்கு இராமாயணத்தை வளைத்தெழுதிய பின்பு கம்பனைக் கடைத்தேற்றிவிடக் கருதாத கவிஞர்கூட்டம் காலமைதி கொண்டுவிட்டது. மீண்டும் இராமாயணத்தை எழுதத் தொடங்கினால் அதில் வரலாற்று நாயகனாக கலைபத்தில் தலைசிறந்த இராவணன் கதைநாயகனாக விளைந்தெழுவான்.
