நான்
கருவேலங்காட்டில்
சுற்றித்திரிந்தவன்..!
கலை இலக்கியமெல்லாம்
கல்லூர்க்குபின் தான்...!
கோர்வையாய்ப்
பேசத்தெரியாது...!
பார்வையில்கூட
முரட்டுத்தனம்தான் உண்டு...!
பதின்மப்பருவம் வரை
அம்மாவைத்தவிர
அடுத்த பெண்களைத் தெரியாது...!
சொற்களில்
தூயவை, தீயவை
பிரித்துபார்த்து பேசியதில்லை...!
சொடுக்கும் நேரத்தில்
கொடுக்கினைப்போல்
கோபம் வரும்...!
கொஞ்சுவதற்கும்
கெஞ்சுவதற்கும்
இடம் பொருள் பார்த்ததில்லை...!
இப்படியும் ஒரு ஆண்மகனென்று
பெயரெடுத்த பிள்ளை நான்...!
இருந்தும்
இதயத்தில்
அன்பிற்கான தேடல் இருந்தே வருகிறது..!
எதையும் சந்திக்கும்முன்
சிந்திப்பவன்...!
சிந்தித்துவிட்டேன்...!
இனி
நன்றும் தீதும் உன்னுடனே...!
இனி
நாளைகள் அனைத்தும் உனக்கெனவே...!
கவிதைகள் வாசித்தேனும்
காதலை நேசித்தேனும்
இன்னுமவை
கைப்படவும் இல்லை...!
மெய்ப்படவும் இல்லை...!
நான் உனக்கு மாணவன்...!
நான் உனக்கு குழந்தை...!
நான் உனக்கு தொண்டன்...!
நான் உனக்கு பணியாள்...!
அதனால், அன்பே..!
ஏதுமறியா எளியவனுக்கு
காதலிக்க கற்றுக்கொடு...!
கருவேலங்காட்டில்
சுற்றித்திரிந்தவன்..!
கலை இலக்கியமெல்லாம்
கல்லூர்க்குபின் தான்...!
கோர்வையாய்ப்
பேசத்தெரியாது...!
பார்வையில்கூட
முரட்டுத்தனம்தான் உண்டு...!
பதின்மப்பருவம் வரை
அம்மாவைத்தவிர
அடுத்த பெண்களைத் தெரியாது...!
சொற்களில்
தூயவை, தீயவை
பிரித்துபார்த்து பேசியதில்லை...!
சொடுக்கும் நேரத்தில்
கொடுக்கினைப்போல்
கோபம் வரும்...!
கொஞ்சுவதற்கும்
கெஞ்சுவதற்கும்
இடம் பொருள் பார்த்ததில்லை...!
இப்படியும் ஒரு ஆண்மகனென்று
பெயரெடுத்த பிள்ளை நான்...!
இருந்தும்
இதயத்தில்
அன்பிற்கான தேடல் இருந்தே வருகிறது..!
எதையும் சந்திக்கும்முன்
சிந்திப்பவன்...!
சிந்தித்துவிட்டேன்...!
இனி
நன்றும் தீதும் உன்னுடனே...!
இனி
நாளைகள் அனைத்தும் உனக்கெனவே...!
கவிதைகள் வாசித்தேனும்
காதலை நேசித்தேனும்
இன்னுமவை
கைப்படவும் இல்லை...!
மெய்ப்படவும் இல்லை...!
நான் உனக்கு மாணவன்...!
நான் உனக்கு குழந்தை...!
நான் உனக்கு தொண்டன்...!
நான் உனக்கு பணியாள்...!
அதனால், அன்பே..!
ஏதுமறியா எளியவனுக்கு
காதலிக்க கற்றுக்கொடு...!