எனக்கு இதுதான் விளங்குவதேயில்லை. மிகவும் அபத்தமானதாகவே இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அம்மாவின் மீதான அன்பென்பது சோகக்குரல்களின் சொந்தப்பாடலா?
தாயைப் பற்றிய சிறுகதை, கதை, நாவல், திரைப்படம், பாடல் என எதுவெனினும் சோகவிரல்களால் அழுகைவிழிகளை ஒத்தடம் செய்துகொண்டுதான் இருக்க வேண்டுமா? அன்னையை ஆரத்தழுவி அன்புகூர்ந்திட முனையும்போதுகூட ஆனந்தக்கண்ணீர் தான் அரவணைப்பின் பசையொட்டிக்கொள்ள வேண்டுமா? ஒன்று எனக்குப் புரியவில்லை. இந்தப் பூமிப்பந்திற்கு ஒரு புதிய உயிரைக் கொண்டுவருகிறவளை நாம் கொண்டாடத்தானே வேண்டும்? ஆனால், நம் கொண்டாட்டங்களின் விளிம்புகளிலெல்லாம் விழிநீர் வழிய வேண்டிய வலியுறுத்தல்களை எதற்காகத் திணிக்கிறோம்?
ஏனென்று தெரியுமா? இங்கே அன்புசெய்யப்படுவது ஒரு கடமையாக இருக்கிறது. கடமை என்று எதையேனும் கொண்டோமானால், அது முறைமைகளை வரையறை செய்துகொள்ளக்கூடியது. அன்பு எப்படி முறைமைகளால் முகிழ்ந்திட முடியும்? அதுவோர் இருப்புநிலை. கொடுக்கல் -வாங்கல் என்ற கோட்பாடுகளுக்கப்பால் நின்று நிலையுணர்த்தும் ஓர் இருப்புநிலை. இயங்கும் வாழ்வியலில் இருப்புநிலை வேண்டுமெனில் - மானுடத்தன்மை மதிப்புறவேண்டுமெனில், மகிழ்ந்திருக்கும் மனப்பாங்கு அன்புடைமையின் ஆகுபொருள் ஆக வேண்டும்.
மகிழ்ந்திருக்கும் மனப்பாங்கிற்கு தன்னைச் சுற்றி நிகழும் அசைவுகளையெல்லாம் கொண்டாடி நுகரும் கொள்நிலை பெருக வேண்டும். அப்போதுதான் சோகஞ்சூழ்ந்த வாழ்வுச்சுணக்கங்களை அன்பின் தழுவல் அப்புறப்படுத்த இயலும்.
அன்புகாட்டலில் எப்போதும் அனுதாபங்களையே விதைக்கவும் -விளைக்கவும் எண்ணுவதாலேதான் தாயென்பவள் தாங்கொணாத் துயர்நிரம்பிய தியாகத்திருவுருவமாக விளம்பரப்படுத்தப்படுகிறாள். அவள் கொண்டாட்டங்களின் கோயில் அல்லவா? புன்னகை தளும்பும் புதிய சொற்களால் கீர்த்தனை பாட வேண்டிய தேவதையல்லவா? நெடுந்தூர சுற்றுலா ஒன்றிற்கேனும் உடனழைத்துப் போக வேண்டிய உற்றத்தோழி அல்லவா? அவளின் பழைய தோழிகள் தேடிக்கண்டறிந்து கொண்டு சேர்த்து ஒருநாளேனும் உரையாட வைக்க வேண்டாமா? இனியேனும் ஒரு நல்ல நண்பனைத் தெரிவுசெய்துகொள்ளும் பரந்தவெளிக்குப் பழக்கிக்கொள்ள வேண்டாமா?
உடல்நலிவு கண்டு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்ட அம்மாவுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, தன் வாழ்வின் வாதைகளையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக கண்ணீர் மல்க ஒன்று சொன்னார்
"பொம்பளைகளாகவே பொறக்கக்கூடாதுப்பா "
இதுதான் பெரும்பான்மை தாய்களின் வடிகட்டப்பட்ட வாழ்க்கைத்தர்க்கம்!
அதற்காக அவர்களைத் துயருற்ற முகங்களோடும் - கண்ணீர் நனைத்த கைகளோடும் - அழுகைப்பாடல்களோடும் அணுகுவதென்பது அடிப்படையற்ற குரூரமான வன்முறை என்றே சொல்லுவேன்.
கேலிக்கிண்டல்களோடு - நாளும் நகைப்பூட்டி தாயை ஒரு குழந்தைபோல கொண்டாடுகின்ற மகனாக என்னைப் புதுப்பித்துக் கொண்டபின் புலப்பட்டவை இவை :
எனக்கு இதுதான் விளங்குவதேயில்லை. மிகவும் அபத்தமானதாகவே இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அம்மாவின் மீதான அன்பென்பது சோகக்குரல்களின் சொந்தப்பாடலா?
தாயைப் பற்றிய சிறுகதை, கதை, நாவல், திரைப்படம், பாடல் என எதுவெனினும் சோகவிரல்களால் அழுகைவிழிகளை ஒத்தடம் செய்துகொண்டுதான் இருக்க வேண்டுமா? அன்னையை ஆரத்தழுவி அன்புகூர்ந்திட முனையும்போதுகூட ஆனந்தக்கண்ணீர் தான் அரவணைப்பின் பசையொட்டிக்கொள்ள வேண்டுமா? ஒன்று எனக்குப் புரியவில்லை. இந்தப் பூமிப்பந்திற்கு ஒரு புதிய உயிரைக் கொண்டுவருகிறவளை நாம் கொண்டாடத்தானே வேண்டும்? ஆனால், நம் கொண்டாட்டங்களின் விளிம்புகளிலெல்லாம் விழிநீர் வழிய வேண்டிய வலியுறுத்தல்களை எதற்காகத் திணிக்கிறோம்?
ஏனென்று தெரியுமா? இங்கே அன்புசெய்யப்படுவது ஒரு கடமையாக இருக்கிறது. கடமை என்று எதையேனும் கொண்டோமானால், அது முறைமைகளை வரையறை செய்துகொள்ளக்கூடியது. அன்பு எப்படி முறைமைகளால் முகிழ்ந்திட முடியும்? அதுவோர் இருப்புநிலை. கொடுக்கல் -வாங்கல் என்ற கோட்பாடுகளுக்கப்பால் நின்று நிலையுணர்த்தும் ஓர் இருப்புநிலை. இயங்கும் வாழ்வியலில் இருப்புநிலை வேண்டுமெனில் - மானுடத்தன்மை மதிப்புறவேண்டுமெனில், மகிழ்ந்திருக்கும் மனப்பாங்கு அன்புடைமையின் ஆகுபொருள் ஆக வேண்டும்.
மகிழ்ந்திருக்கும் மனப்பாங்கிற்கு தன்னைச் சுற்றி நிகழும் அசைவுகளையெல்லாம் கொண்டாடி நுகரும் கொள்நிலை பெருக வேண்டும். அப்போதுதான் சோகஞ்சூழ்ந்த வாழ்வுச்சுணக்கங்களை அன்பின் தழுவல் அப்புறப்படுத்த இயலும்.
அன்புகாட்டலில் எப்போதும் அனுதாபங்களையே விதைக்கவும் -விளைக்கவும் எண்ணுவதாலேதான் தாயென்பவள் தாங்கொணாத் துயர்நிரம்பிய தியாகத்திருவுருவமாக விளம்பரப்படுத்தப்படுகிறாள். அவள் கொண்டாட்டங்களின் கோயில் அல்லவா? புன்னகை தளும்பும் புதிய சொற்களால் கீர்த்தனை பாட வேண்டிய தேவதையல்லவா? நெடுந்தூர சுற்றுலா ஒன்றிற்கேனும் உடனழைத்துப் போக வேண்டிய உற்றத்தோழி அல்லவா? அவளின் பழைய தோழிகள் தேடிக்கண்டறிந்து கொண்டு சேர்த்து ஒருநாளேனும் உரையாட வைக்க வேண்டாமா? இனியேனும் ஒரு நல்ல நண்பனைத் தெரிவுசெய்துகொள்ளும் பரந்தவெளிக்குப் பழக்கிக்கொள்ள வேண்டாமா?
உடல்நலிவு கண்டு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்ட அம்மாவுடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, தன் வாழ்வின் வாதைகளையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக கண்ணீர் மல்க ஒன்று சொன்னார்
"பொம்பளைகளாகவே பொறக்கக்கூடாதுப்பா "
இதுதான் பெரும்பான்மை தாய்களின் வடிகட்டப்பட்ட வாழ்க்கைத்தர்க்கம்!
அதற்காக அவர்களைத் துயருற்ற முகங்களோடும் - கண்ணீர் நனைத்த கைகளோடும் - அழுகைப்பாடல்களோடும் அணுகுவதென்பது அடிப்படையற்ற குரூரமான வன்முறை என்றே சொல்லுவேன்.
கேலிக்கிண்டல்களோடு - நாளும் நகைப்பூட்டி தாயை ஒரு குழந்தைபோல கொண்டாடுகின்ற மகனாக என்னைப் புதுப்பித்துக் கொண்டபின் புலப்பட்டவை இவை :
எனக்கு இதுதான் விளங்குவதேயில்லை. மிகவும் அபத்தமானதாகவே இதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அம்மாவின் மீதான அன்பென்பது சோகக்குரல்களின் சொந்தப்பாடலா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக