கூர்தீட்டிகளால்
கொலையுண்டுபோன
யானைகளின் கதறல்
கானத்தை அரற்றியது!
திடுக்கிட்டெழுந்த
என் கனவுக்குள்
அந்தக் கதறல்
கேட்டுக்கொண்டேயிருந்தது!
ஏனிந்த தொல்லை?
எங்கோ விழுந்த அடிகளும்
குத்திக் கிழித்த காயங்களும்
என் நினைவுக்கடியில்
நெருஞ்சிமுட்களை
ஏன் தூவிப்போகின?
பழைய நாட்களுக்குள்
காலப்பயணம்
போய் வந்த நாளொன்றில்
கண்டுகொண்ட உண்மைக்கு
களிறுபட்ட துன்பத்தின் சாயல்!
பெண்வாழ்க்கையோடு
பெரும்பாடு துயரங்களுக்கெல்லாம்
விலங்கொடு அனையும்
விந்தை இருக்கிறது தான்.!
நான்பட்ட பாடுக்கு
யானை வாழ்க்கை போலும்!
கொலையுண்டுபோன
யானைகளின் கதறல்
கானத்தை அரற்றியது!
திடுக்கிட்டெழுந்த
என் கனவுக்குள்
அந்தக் கதறல்
கேட்டுக்கொண்டேயிருந்தது!
ஏனிந்த தொல்லை?
எங்கோ விழுந்த அடிகளும்
குத்திக் கிழித்த காயங்களும்
என் நினைவுக்கடியில்
நெருஞ்சிமுட்களை
ஏன் தூவிப்போகின?
பழைய நாட்களுக்குள்
காலப்பயணம்
போய் வந்த நாளொன்றில்
கண்டுகொண்ட உண்மைக்கு
களிறுபட்ட துன்பத்தின் சாயல்!
பெண்வாழ்க்கையோடு
பெரும்பாடு துயரங்களுக்கெல்லாம்
விலங்கொடு அனையும்
விந்தை இருக்கிறது தான்.!
நான்பட்ட பாடுக்கு
யானை வாழ்க்கை போலும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக