திங்கள், 18 நவம்பர், 2013

:::உங்களுக்காக சில வரிகள்...!:::

நிலம்...!
----------------
உலகமே
தூங்கும்
மண்மெத்தை...!
----------------

நீர்...!
----------------
எம் இனம்
நன்னீராகக்
கொண்டதைவிட‌
கண்ணீராக‌ செந்நீராகவே
உன்னைக் கொண்டுள்ளது...!
----------------

நெருப்பு...!
----------------
மாசுபடுத்தவியலா
பூதம் நீ...!
அதனால்
உன்னைத்தான்
நாங்கள்(தமிழ் மறவர்கள்)
அதிகம் முகர்ந்து
குளித்துள்ளோம்..!
----------------

காற்று...!
----------------
உலகம்
சுற்றும் வளி(பன்)...!
உயிர்
சுமக்கும்
உயிர்தாங்கி...!
----------------

வானம்...!
----------------
பகலில்
நீல, வெள்ளைத்
தொலைக்காட்சி...!
இரவில்
கருப்புத்தொலைக்காட்சி...!
புவியின் பலகணி(சன்னல்)...!
----------------

மரங்கள்...!
----------------
இயற்கையின்
மண்விசிறிகள்...!
காற்றின் காதலிகள்...!


----

உதயகுமார் தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக