செவ்வாய், 19 நவம்பர், 2013

:::அலைகள் கற்றுத்தரும்...!:::

உயிர் வற்ற‌

உடல் இற்ற‌

நிகழ்ந்தேறும்

உன் உதட்டின்

ஈரத்தழுவலுக்காக‌

காத்திருக்கிறேன்...!

முப்பாலின்

மூன்றாம் பாலில்தான்

அன்பின் கடல்

அலையாடுதாம்...!

நீச்சல் தெரியாது...!

அதனாலென்ன...?

அலைகள்

கற்றுத்தரும்...!

நீ வா...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக