புதன், 20 நவம்பர், 2013

:::அவளுக்காகத்தான்...!:::

யாரவள்...?

என்

அதிகார ஆளுமையைத்

தளைபடுத்தி வலைபோடப் போறவள்...!

என்

ஆண்மைக் கயிற்றினை

இழுத்து முடிகொள்ளப் போறவள்...!

என்

இடவலதோள்களுக்கு

இடம்பிடிக்கப் போறவள்...!

என்

எழுத்துகளனைத்தையும்

இலக்கிய எடைபோடப் போறவள்...!

என்

கோதிய சிகையினைக்

கைவிரல்கள் கொண்டு

கலைத்திடப்போறவள்...!

என்

தனிமைத் தவத்தினை

இன்சொற்களால் இனிமையாக்கப் போறவள்...!

என்

வறண்டுக்கிடக்கும் வாழ்க்கையில்

கார்காலமாய் சூழப்போறவள்...!

என்

எதுவும் இல்லா எல்லாவற்றிற்கும்

எல்லாமுமாய் இருக்கப் போறவள்...!

யாரவளோ

அவளுக்காகத்தான்

என்

எண்ணங்களையெல்லாம்

கனவுகளையெல்லாம்

விருப்பங்களையெல்லாம்

எதிர்பார்ப்புகளையெல்லாம்

புழுதி கிளம்ப‌

எழுதிக்கொண்டிருக்கிறேன்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக