புலரும் பொழுதுக்குக்
காத்திருக்கும் குயிலைப்போல...
மலரும் பூவுக்குக்
காத்திருக்கும் வண்டைப்போல...
வளரும் புல்லுக்குக்
காத்திருக்கும் முயலைப்போல...
உலரும் முகிலுக்குக்
காத்திருக்கும் மயிலைப்போல...
உனக்காக
காத்திருக்கும் எனக்குள்
நொடிகள்தோறும்
நொதிகளின் தூண்டல்...
மூளைக்கும் மூச்சுக்கும்
மூளும் சண்டை...
நீ வரும்வரைக்கும்
எந்த இரைக்கும்
இசையாது என் மனம்...!
வா...! வரம் தாங்கி வா...!
வரமாகவே வா...!
தவங்களைத் தள்ளிப்போட்டுவிட்டு
வரங்களைத் தர
விரைவாக வா...!
காத்திருப்பது
நான் மட்டுமில்லை...!
என் கற்பனையும் தான்..!!!
காத்திருக்கும் குயிலைப்போல...
மலரும் பூவுக்குக்
காத்திருக்கும் வண்டைப்போல...
வளரும் புல்லுக்குக்
காத்திருக்கும் முயலைப்போல...
உலரும் முகிலுக்குக்
காத்திருக்கும் மயிலைப்போல...
உனக்காக
காத்திருக்கும் எனக்குள்
நொடிகள்தோறும்
நொதிகளின் தூண்டல்...
மூளைக்கும் மூச்சுக்கும்
மூளும் சண்டை...
நீ வரும்வரைக்கும்
எந்த இரைக்கும்
இசையாது என் மனம்...!
வா...! வரம் தாங்கி வா...!
வரமாகவே வா...!
தவங்களைத் தள்ளிப்போட்டுவிட்டு
வரங்களைத் தர
விரைவாக வா...!
காத்திருப்பது
நான் மட்டுமில்லை...!
என் கற்பனையும் தான்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக